தமிழக அரசு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கட்டணம் உயர்வு!
கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான உணவு மற்றும் உறைவிட கட்டணம் 400 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 95 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதி கட்டணம் உயர்வு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி, மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட நல திட்டங்களால் அரசு பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளி ,மாணவர்களுக்கு மழை காலத்தில் உதவும் வகையில் ரெயின் கோர்ட் மற்றும் பூட்ஸ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது கல்வி உதவித்தொகை திட்டத்திங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உணவு மற்றும் உறைவிட கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பாமாயிலுக்கான இறக்குமதி வரி 5% குறைப்பு, விலை சரியுமா? மத்திய அரசு அறிவிப்பு!
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில் அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும் அம் மாணவர்கள் விடுதியில் தங்கி படித்தால் அவர்களுக்கு உணவு மற்றும் உறைவிட கட்டணமும் வழங்கப்படும். பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு 175 ரூபாய், தொழிற்கல்வி மாணவர்களுக்கு 350 ரூபாய், ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 225 ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது.
சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
இந்த நிலையில் உணவு மற்றும் உறைவிட கட்டணத்தை 400 ஆக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 225 ரூபாய் கட்டணம் தற்போது 400 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 95,000 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.