பாமாயிலுக்கான இறக்குமதி வரி 5% குறைப்பு, விலை சரியுமா? மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியா முழுவதும் சமையல் எண்ணெய் விலை கடந்த ஓராண்டாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தற்போது ஒரு எண்ணெய் வகைக்கு வரிக்குறைப்பு விதித்துள்ளது.
வரி குறைப்பு:
இந்தியாவில் அதிகமாக இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலில் கச்சா எண்ணெய், தங்கம் இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து 3வது இடத்தில் சமையல் எண்ணெய் இடம்பெற்றுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கடந்த ஓராண்டு காலமாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதன் மீதான வரி குறைப்பு பற்றிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
இதனால் பொதுமக்கள் நலன் கருதி சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக உள்நாட்டில் எண்ணெய் வகைகளின் விலையை குறைக்கும் விதமாக இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளில் இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரியை 17.5% சதவிகிதத்தில் இருந்து 5% குறைத்து தற்போது 12.5% ஆக மாற்றியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 15 முதல் 20 சதவீதம் சம்பள உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த வரி குறைப்பு அறிவிப்பு வருகிற 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் அமலில் இருக்கும் என்று மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரி 32.5 சதவீதத்தில் இருந்தது. இதனை 15 சதவீதம் குறைத்து 17.5 சதவீதத்தில் குறைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சமையல் எண்ணெய் விலை ரூ.4 முதல் ரூ.7 வரை குறைவாக விற்கப்பட்டது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக இருப்பதால் சமையல் எண்ணெய் விலை மீண்டும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.