சென்னை சி.எம்.டி.ஏ குழுமத்தில் வேலைவாய்ப்பு – ஜன.13 விண்ணப்பிக்க கடைசி நாள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி வருகின்றனர். அதையடுத்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ தனது காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தங்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப முன் வருகின்றனர். சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான என்பதன் சுருக்கம் தான் சி.எம்.டி.ஏ என்றழைக்கப்படுகிறது. சென்னையில் இயங்கி வரும் சி.எம்.டி.ஏ என்பது ஒரு அரசு நிறுவனமாகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA நிலுவைத் தொகை – டிசம்பர் 25ல் அறிவிப்பு?
அதனை தொடர்ந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ. தங்களுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 3 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் இதில் மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளது. அதில் உதவி திட்ட அலுவலர் பணியிடத்தில் 15 காலியிடங்களும் மற்றும் முதல் நிலை திட்ட உதவியாளர் பணியிடத்தில் 15 காலிப்பணியிடங்களும் உள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தமிழக அரசு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கட்டணம் உயர்வு!
மேலும் இதற்கு விண்ணப்பிக்க விருப்பும் உள்ளவர்கள் www.cmdachennai.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக ஜனவரி 3 ஆம் தேதிக்குள் பதிவு செய்து முடித்திருக்க வேண்டும். அதையடுத்து சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். இதனை முடித்த பிறகே ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களின் வயது வரம்பு அரசு விதிகளின்படி பின்பற்றப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அதன் பின் நேர்காணலில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவார்கள் என்றும் சி.எம்.டி.ஏ என்று அறிவித்துள்ளது.