தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 30000 காலிப்பணியிடம் நிரப்ப திட்டம்!
தமிழகத்தில் ஜூலை 22 ஆம் தேதி 100 இடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், 30000 காலிப்பணியிடங்கள் இந்த முகாமில் நிரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் 2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தற்போது கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி வரும் ஜூலை 22ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 100 இடங்களில் மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடந்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், சென்னையில் ஜூலை 22 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாகவும், கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட பெரிய பெரிய நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரி, டிப்ளமோ, ஐடிஐ என அனைத்து கல்வித் தகுதி பெற்றவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இலவச அனுமதியின் மூலமாகவே கலந்து கொண்டு தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கும் விண்ணப்பிக்கலாம் என வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.