பணி நேரத்தில் அடையாள அட்டை அணியாத ஊழியர் மீது கடும் நடவடிக்கை – அரசின் திடீர் உத்தரவு!
அரசு ஊழியர்களும் பணி நேரத்தில் கட்டாயமாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் எனவும், அடையாள அட்டை அணியாத ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் தற்போது உத்தரவிடப்பட்டிருக்கிறது.
அடையாள அட்டை:
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிறுவனங்கள், கார்ப்பரேஷன், வாரியங்களின் அதிகாரிகள் என அனைவருக்குமே அவரவர் நிறுவனத்தின் மூலமாக அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பணி நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் பல்வேறு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவதில்லை.
தமிழக பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இதனை செய்ய வேண்டாம்.. கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!
இந்நிலையில், மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அதிகாரிகள், ஊழியர்கள் என யாரும் அடையாள அட்டை அணிவதில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தற்போது அரசு தலைமை செயலர் வந்திதா சர்மா தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, கட்டாயமாக அரசின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கார்ப்பரேஷன் நிறுவனங்கள், வாரியங்களின் அதிகாரிகள் என அனைவருமே அடையாள அட்டையினை அணிந்திருக்க வேண்டும்
மேல் அதிகாரிகள் அடையாள அட்டையினை ஊழியர்கள் அணிந்து இருக்கிறார்களா என்பதனை சோதனை நடத்த வேண்டும் எனவும், அலுவலகத்தில் பணி நேரத்தில் அடையாள அட்டை அணியாத ஊழியர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசு தலைமை செயலர் தற்போது உத்தரவிட்டிருக்கிறார்.