தமிழக பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இதனை செய்ய வேண்டாம்.. கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 7ம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு அமைச்சர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கட்டணம்:
தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் பராமரிப்பு பணிகள் மற்றும் பள்ளிகளை திறக்க தேவையான மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் 8ம் தேதி முதல் 45 நாட்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!
ஏற்கனவே அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் வகுப்பிற்காக ரூ. 200 வசூல் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த தொகையையும் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை மீறி ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.