
மக்களுக்கு எச்சரிக்கை…நாளை(14-02-2025) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!
நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் செயல்முறை, மாதத்தில் ஒரு நாள் மின் பராமரிப்பு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், துணை மின் நிலையங்களில் இந்த பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (14-02-2025) சென்னை, நாமக்கல் மற்றும் குன்னூர் சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருப்பூர், வேலூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார் திருநகர் பகுதி, பல்லவன் நகர், பெருமாள் கோவில் தெரு, முகாம்பிகை நகர்
கோயம்புத்தூர்:
சோமையம்பாளையம், யமுனா நகர், காளப்பநாயக்கன் பாளையம், GCT நகர், கணுவாய், KNG புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ், வித்யா காலனி, சாஜ் கார்டன், VMT நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி.
கன்னியாகுமரி:
கோட்டார், இளங்கடை, ராமவர்மபுரம், கலெக்டர் அலுவலகம், மீனாட்சிபுரம், ராமன்புதூர், வீரநாராயணமங்கலம், கோணம், எறும்புகாடு, இராஜாக்கமங்கலம், பழவிளை, தெக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு.
திருப்பூர்:
பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, சுண்டகாம்பாளையம், வாளவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், ராகல்பாவி, மொடக்குப்பட்டி, கஞ்சம்பட்டி, உடுக்கம்பாளையம், லட்சுமிபுரம்.
வேலூர்:
விளாப்பாக்கம், சதுர், ஆனைமல்லூர், வளையத்தூர், காவனூர், திமிரி.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல்.
தூத்துக்குடி:
துரைசாமிபுரம், நாலாட்டின்புதூர், வில்லிசேரி, வானரமுட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.


























