மின் கட்டணம் திடீர் உயர்வு – உயர் நீதிமன்றம் தலையீடு..விவரம் உள்ளே!
கேரளாவில் ஜூலை 1ம் தேதி முதல் புதிய மின் கட்டண முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மின் கட்டணம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
மின் கட்டணம்:
கேரள மாநிலத்தில் கடந்த 2022 ஜூன் 25 ஆம் தேதி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை திருத்தி அமைத்தது. அதாவது மாநிலத்தின் மின் கட்டணத்தை 6.6% உயர்த்தி அறிவித்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உயர்த்தப்பட்ட மின்கட்டணம் நலிவடைந்த பிரிவினர், விவசாயிகள் சிறு தொழில் புரிபவர்களுக்கு பொருந்தாது என்று அறிவித்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடையும் மர்ம காய்ச்சல் – அரசின் புதிய நடவடிக்கை!
புதிய மின் கட்டண முறை ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது. இது தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் வேளையில் மின்கட்டண உயர்வை அமல்படுத்துவது தாமதமாகியுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு தொடர்பான வழக்கு ஜூலை 10 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அதனால் தற்போதைய சூழலில் பழைய கட்டணமே மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.