தேர்தல் பணிகளில் ஓய்வு பெறும் அரசு அதிகாரிகளை அனுமதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையம் கடிதம்!!!
அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஓய்வு பெரும் அரசு அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
களம் காட்டும் தேர்தல் பணிகள்:
தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான அனைத்து வேலைகளிலும் தீவிரம் காட்டிவருகின்றனர். தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல், வாக்காளர் அட்டைகளில் உள்ள பிழைகளை சரிபார்த்தல் போன்ற வேலைகளில் இறங்கியுள்ளனர். அடுத்து வரும் தேர்தலில் இருபெரும் ஆளுமை தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாமல் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் சந்திக்கின்றன. இந் நிலையில் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது, அந்த கடிதத்தில், “தமிழகத்தில் 6 மாதங்களில் ஓய்வு பெற உள்ள எந்தவொரு அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் பணி ஈடுபட கூடாது எனவும். தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் அவரது சொந்த மாவட்டங்களில் பணியாற்றக் கூடாது எனவும், முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை தேர்தல் பணிக்கு நியமிக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட சில அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளது.
இந்த கடிதத்தை தலைமை தேர்தல் ஆணையம் தமிழகம் உள்பட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |