தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீட்டில் பொறியியல் சேர்ந்திருக்கும் 9 மாணவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்க இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
கல்வி உதவித்தொகை:
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் உயர் படிப்பை தொடர வேண்டும் என்கிற நோக்கில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் படிப்பு தொடர்வதற்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 6 முதல் 12ம் வகுப்பு வரையில் தமிழ் வழியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேர 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட வருகிறது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
இந்த ஆண்டு தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைந்திருக்கும் நிலையில் 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் எக்கச்சக்கமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது, இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் சேரும் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்று கொள்கிறது.
தமிழகத்தில் வாழை இலை விலை கடும் சரிவு – வியாபாரிகள் வருத்தம்!
இந்நிலையில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் கூடுதலான கல்வி உதவித் தொகையை வழங்க முதல்வர் அவர்கள் முடிவெடுத்துள்ளார். அதாவது, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பில் படிக்கும் 9 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சாதனை விஞ்ஞானி என்கிற பெயரில் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.