
மாணவர்கள் கவனத்திற்கு.. ஜனவரி முதல் வாரத்தில் அரையாண்டு தேர்வு..!! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு.!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஃ பெஞ்சல் புயலாக வலுப்பெற்று கடந்த ஞாயிற்றுகிழமை கரையை கடந்தது. இதனால் பல மாவட்டங்களில் பலத்தகாற்றுடன் கனமழை பொழிந்து எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதோடு அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் 1 வாரத்திற்கு மேலாக விடுமுறை அளிக்கப்பட்டது.
துணை முதல்வரை சுட்டுக்கொல்ல முயற்சி..!! வெளியான பகீர் தகவல்..!! பதறவைக்கும் வீடியோ ஆதாரம் உள்ளே..!!
மேலும், இந்த மாத இறுதியில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், இவ்விடுமுறைகளால் பாடங்கள் ஏதும் முடிக்காத சூழலில் எவ்வாறு மாணவர்களை தேர்வு எழுத அனுமதிப்பது என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இது குறித்து பள்ளிக்கல்விதுறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “மழையால் பாதிக்கப்பட்டு அரையாண்டு தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும் எனவும், மழையால் விழுப்புரத்தில் உள்ள 45 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும்” என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

























