இந்தியா பெண்களுக்கு சமையல் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானிய தொகை எவ்வளவு என்பதை வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். இதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் மானியம்:
மத்திய அரசால் மே 2022ம் ஆண்டு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இந்திய பெண்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய தொகையுடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிலிண்டருக்கான மானிய தொகையானது ஒரு சிலிண்டருக்கு ரூ.200 வீதம் பயனர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இம்மானிய தொகையானது கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில நபர்களுக்கு சரிவர வழங்கப்படவில்லை.
UPSC ஆணையத்தில் Scientist-B வேலைவாய்ப்பு 2024 – 100+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
இதனால் மக்கள் தங்களுக்கு மானிய தொகை வருகிறதா இல்லையா என்னும் குழப்பத்தில் உள்ளார்கள். இக்குழப்பத்தை வீட்டிலிருந்த படியே தீர்த்துக் கொள்ளலாம். அதாவது மானிய தொகை பற்றிய விவரத்தை ஆன்லைன் மூலம் எளிமையாக அறிந்து கொள்ளலாம். தங்களது மானிய தொகையை சரிபார்க்க விரும்பும் நபர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
வழிமுறைகள்:
- https://www.mylpg.in என்ற வலைதள பக்கத்தை கிளிக் செய்து Open செய்ய வேண்டும்.
- பிறகு திரையில் தோன்றும் பக்கத்தில் 3 சிலிண்டர்களின் படம் காண்பிக்கப்படும்.
- இதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரின் படத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் தோன்றும் பக்கத்தில் உங்களது மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
- அதன் பின் OTP, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
- பிறகு தோன்றும் பக்கத்தில் View Cylinder Booking History / Subsidy transferred என்னும் தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் உங்களது மானிய தொகை குறித்த முழு விவரங்களும் திரையில் தோன்றும்.