மகாராஷ்டிராவில் சிக்னலில் திருநங்கைகள் யாசகம் செய்ய போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
போலீசார் தடை
இந்தியாவில் திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து இருந்தாலும், அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதால் பலர் பிச்சை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்ட்ராவில் திருநங்கைகள் சிக்னலில் பிச்சை எடுப்பதால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக அதிகமாக புகார் எழுந்துள்ளது.
தொடர்ந்து 5 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்த தங்கம் விலை – நிம்மதி மூச்சு விடும் நகைப்பிரியர்கள்!
எனவே புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த செயல் இடையூறாக இருப்பதாக பலர் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த தடையை மீறி பிச்சை எடுத்தால் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.