
மாணவர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்..!! மார்ச் மாதத்தை தொடர்ந்து ஏப்ரலிலும் 3 நாள் தொடர் விடுமுறை..!! வெளியான புதிய தகவல்..!!
கோடைக்காலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். மேலும், எப்போது விடுமுறை கிடைக்கும் தங்களது சொந்த ஊருக்கு செல்லலாம் என காத்து கிடக்கின்றன. இதை சமாளிக்கும் விதமாக மார்ச் மாத இறுதியில், அதாவது மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அமைந்தது. இந்த விடுமுறையை பயன்படுத்தி மக்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் ஏப்ரல் மாதமும் இதேபோல் தொடர் விடுமுறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TNPSC தேர்வர்களுக்கு ஒரு முக்கிய செய்தி…!! தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் அதிரடி மாற்றம்…!!
அதாவது, “திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நாட்கள் வார விடுமுறை என்பதால் சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் கூறுகையில், ஏப்ரல் 7 திங்களன்று உள்ளூர் விடுமுறை என்பதால், குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்”.

























