வங்கிகளுக்கு RBI பிறப்பித்த அதிரடி உத்தரவு – மீறினால் நாள் ஒன்றுக்கு ரூ. 5000 இழப்பீடு!
இந்தியாவில் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதனை செலுத்திய 30 நாட்களுக்குள் அவர்களுக்கு உரிய ஆவணங்களை வழங்க வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் உத்தரவு:
இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தனிநபர் சொத்துக்கள் மற்றும் நகைகளின் ஆவணங்களை வைத்து கடன் பெறுகின்றனர். அந்த ஆவணங்களின் மதிப்பை பொறுத்தும் வாடிக்கையாளரின் நிதி தேவையை பொருத்தும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த தவறினாலோ அல்லது காலம் தாழ்த்தினாலோ ஆவணங்களை முறையாக வழங்குவதில்லை, கூடுதல் வட்டி மற்றும் அசல் வசூலிக்கப்படுவதாக என புகார்கள் எழுந்தது.
செப்டம்பர் 19க்கு பின் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது – அதிரடி அறிவிப்பு!
இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கடன் பெற்ற நபர் கடன் தொகையை முழுமையாக செலுத்திய 30 நாட்களுக்குள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வாடிக்கையாளரின் சொத்து ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் கடன் வாங்கிய நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.5000 இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.