லட்டுக்கு ஆதார் வாங்கணுமா..? இது என்னடா புதுசா இருக்கு..
திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவில் இடம் ஆகும். அத்தகைய கோவிலில் இருக்கும் ஏழுமலையானுக்கு பின் தேவஸ்தானம் வழங்கும் இலவச லட்டுவும் பிரசித்தி பெற்றதாகும். ஆனால் தற்போது அந்த லட்டு வாங்குவதில் சில கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதாவது திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்குவதில் சில மோசடிகள் நடப்பதாக குற்ற சாட்டுகள் வைத்தனர்.
முகேஷ் அம்பானியை வீழ்த்திய கவுதம் அதானி..! குறைந்த சொத்தின் மதிப்பு ..!
அதை சரி செய்யும் விதமாக லட்டு வாங்க வரும் நபர்கள் கட்டாயமாக ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், கூடுதல் லட்டு பெற வழக்கம்போல் 50 ரூபாய் செலுத்தினால் போதும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
























