தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – திமுக தலைவர் ஸ்டாலின் தகவல்!!
தற்போது மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின் தகவல்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. பணக்காரர்கள், படித்தவர்கள், ஏழை, பெரியவர்கள் என்ற பாகுபாடு காட்டாமல் அனைவரையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது இந்த கொடிய வைரஸ். இந்த தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் ஒவ்வொரு நாளும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அனைவரும் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கொரோனாவின் முதல் அலை காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் கடைபிடிக்கபட்டது. அதனால் ஒவ்வொரு பிரஜையும் பொருளாதார நெருக்கடிகள், உளவியல் பிரச்சனைகள் போன்றவற்றை எதிர்கொள்ள கூடிய சூழல் உருவானது. பலர் தங்களது தொழில்களை இழந்து வறுமையில் தள்ளப்பட்டனர்.
தமிழகத்தில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் வருத்தம்!!
இந்த பாதிப்புகளில் இருந்து மக்களால் இன்னும் முழுதாக மீள முடியவில்லை. இதனால் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தின் போது சில கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. பொது மக்களுடன் சேர்ந்து திமுக கட்சியினர் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மே மாதம் 2 ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு இருக்காது என்று நம்புவோம். அதுவரை பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மை போன்றவர்களுக்கு பக்கபலமாக இருப்போம்’ என தெரிவித்துள்ளார்.