தமிழகத்தில் அதிரடியாக மாற்றப்படும் மாவட்ட செயலர்கள்- முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மாவட்ட செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்த பிறகு மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான 15 வது உட்கட்சித்தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்டக் கழக தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் அடுத்த கட்டமாக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலானது மாவட்ட செயலாளர், மூன்று துணை செயலர்கள், பொருளாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வேட்புமனு தாக்கல் காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் கட்சி அமைப்பு ரீதியாக 77 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில் அவை 72 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மதுரையில் ஒன்று, கோவையில் இரண்டு, திருப்பூரில் இரண்டு என, மொத்தம் ஐந்து மாவட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் “இந்த” இடங்களில் ரயில் சேவை ரத்து – காரணம் இது தான்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் நடைபெறப்போகும் மாவட்ட செயலாளர் தேர்தல் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தேர்தலை சிறப்பாக நடத்துவது, பதவிகளை பகிர்ந்து அளிப்பது தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் உள்ளாட்சி, உட்கட்சி தேர்தலில் செயல்பட்டவர்களை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், நேரு, பொன்முடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்