குரங்கு அம்மை நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு ..!! சீன அரசு தகவல்..!!
கடந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது அண்டை நாடுகளில் இந்த நோய் தொற்று அதிகமாக பரவி வருவதாக உலக சுகாதார துறை தகவல் தெரிவித்திருந்தது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது குரங்கு அம்மை நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை.. திருப்பி அனுப்பப்பட்ட அரசு பேருந்துகள்.. முழு விவரம் உள்ளே!!
அதாவது, ஷாங்காய் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிக்கல் ப்ராடக்ட்ஸ் மற்றும் சினோபார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி குரங்கம்மையை குணப்படுத்த உதவும் என நம்பிக்கை வைத்துள்ளதாகவும், மேலும் இந்த தடுப்பூசியை பரிசோதிக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


























