தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி!!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதியும், 9 மற்றும் 11 மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிகளில் கொரோனா விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்து கட்டுப்பாட்டு விதிகளும் தீவிரப்படுத்தப்பட்ட நிலையிலும் சில இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் 4 ஆசிரியர்கள் மற்றும் 1 மாணவிக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்கத்தில் 9, 10 & 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – கல்வித்துறை அறிவுறுத்தல்!!

அதனை தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!