IPL 2025: மீண்டும் தோனி தலைமையில் களமிறங்கும் சென்னை அணி.. வெளியான திடீர் அறிவிப்பு..!!
2025 ஆம் ஆண்டுக்கான IPL போட்டியானது தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த தொடரானது மே 25, 2025 வரை நீடிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் 23 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகள் பெற்று IPL பாய்ண்ட்ஸ் டேபிளில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை அணி குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.ராவுக்கு பாரதிய பாஷா விருது அறிவிப்பு..!! முழு விவரம் உள்ளே..!!
அதாவது, கடந்த மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜுக்கு முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இத்தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனாலும் ருதுராஜ் மீண்டும் களமிறங்கி விளையாடி வந்தார். இந்நிலையில் “முன்பு ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் முழுவதுமாக விலகுவதால் அடுத்த போட்டி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல்படுவார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அறிவித்துள்ளார்”.


























