திருப்பதி கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தான அதிகாரி அறிவுறுத்தல்!

0
திருப்பதி கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - தேவஸ்தான அதிகாரி அறிவுறுத்தல்!
திருப்பதி கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - தேவஸ்தான அதிகாரி அறிவுறுத்தல்!
திருப்பதி கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தான அதிகாரி அறிவுறுத்தல்!

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என தேவஸ்தான அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.மேலும் தேவஸ்தான கடைகளில் கண்ணாடி, செம்பு, எவர்சில்வர் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நெகிழிக்கு தடை :

பிளாஸ்டிக் எளிதில் மட்கும் தன்மை அற்றவை. ஒரே ஒரு பிளாஸ்டிக் பையானது மட்குவதற்கு பல ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும், மற்றும் மண் சத்துக்களுக்கும் பிளாஸ்டிக்கானது தீங்கு விளைவிக்கிறது. பிளாஸ்டிக் என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் முக்கிய பொருளாக உள்ளது. பிளாஸ்டிக் இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒன்றாக திகழ்கிறது. காய்கறி, பால், துணி கடைகள், மருந்து கடைகள், மளிகை கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு பெருகியுள்ளது.

நாடு முழுவதும் மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய ஊதிய குறியீடு!!

இதனால் பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் அவைகளும் மடிந்து போகும் நிலை உருவாகிறது. மேலும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் தன்மையை பாதிக்கிறது. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத் தன்மை, இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் உடைமைகள் பரிசோதிக்கப்படும் அதில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் இருந்தால் அவற்றை அகற்றிய பிறகே அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் கண்ணாடி, செம்பு, எவர்சில்வர் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி ஆங்காங்கே அமைக்கப் பட்டுள்ளது. அதன் அருகில் கோப்பைகள், டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் அதை பயன்படுத்த வேண்டும் எனவும் இன்னும் 2 மாத காலத்துக்குள் இவை முற்றிலும் அமல்படுத்தப்படும் எனவும் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!