“அந்த அறிவு கூட இல்ல அந்த ஆளுக்கு…” என தரக்குறைவாக விமர்சித்த துணைமுதல்வர்… யாரை தெரியுமா..?
சென்னையில் நேற்று “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா எழுதிய இந்நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட, முன்னாள் நீதியரசர் சந்துரு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பலரும் பேசிய உரையால் தற்போது அரசியல் ஆடுகளம் சூடுபிடித்துள்ளது. அதில், விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “பிறப்பால் இனி யாரும் முதல்வர் ஆகக்கூடாது; கருத்தியல் தலைவர்கள் தான் இனி ஆள வேண்டும்” என்று நேற்று கூறினார். அதற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறிய பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது, “யார் இங்க பிறப்பால் முதல்வர் ஆனது; மக்கள் தேர்ந்தெடுத்து தான் முதல்வரானாரு, அந்த அறிவு கூட இல்ல அந்த ஆளுக்கு…” என காட்டமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது, தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக மாறியுள்ளது.



























