நாளை (டிச.06) பள்ளிகளுக்கு விடுமுறை – கோரிக்கையை ஏற்குமா அரசு???
மஹாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் நாளை விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விடுமுறை:
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வரலாறு காணாத அளவுக்கு இரவு பகலாக மழை கொட்டி தீர்த்தது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது இந்த மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 190 கிலோ மீட்டர் தூரத்தில் நெல்லூருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக நெல்லூர் பகுதியில் கனமழை பெய்யக்கூடும் எனவும் காற்று மணிக்கு 110 கிலோ மீட்டர் வீசும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக ஒடிசாவிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (டிச.06) பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவரும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (டிச.06) விடுமுறை அளிக்க மாநில மஹாராஷ்டிராவில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.