Daily Current Affairs March 12, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs March 12, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நிகழ்வுகள் – 12 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சூரக்ஷ நிதி திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது!!

  • பிரதமர் மோடியின் கனவு திட்டமான பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சூரக்ஷ நிதி திட்டம் இனி இருப்பு நிதியாக (non-lapsable reserve fund) பயன்படுத்த மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 2007 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிதிச் சட்டத்தின் பிரிவு 136-பி இன் கீழ் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலமாக கிடைக்கப்பெறும் நிதி மூலமாக தேசிய சுகாதார பணி, ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா, ஆயுஷ்மான் பாரத் – சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றிற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை” 17 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்!!

  • மத்திய அரசு அறிவித்திருந்த “ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை” திட்டம் இந்தியாவில் உள்ள 17 மாநிலங்களில் செயப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மூலமாக மக்கள் எந்த மாநிலத்திலும் தங்களது குடும்ப அட்டையினை பயன்படுத்தும் வழிமுறையினை அமல்படுத்தியது.
  • இந்த திட்டத்தினை அமல்படுத்திய 17 மாநிலங்கள் 37 ஆயிரம் 600 கோடி ரூபாய் கடன் பெறுவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

APEDA முதன் முறையாக ஆன்லைன் மூலமாக வர்த்தக கண்காட்சியினை நடத்தியுள்ளது!!

  • APEDA என்று கூறப்படும் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி கழகம் முதன் முறையாக ஆன்லைன் வாயிலாக தங்களது வர்த்தக கண்காட்சியினை நடத்தியுள்ளது. இந்தியாவின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி திறனை அதிகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி கடந்த மார்ச் 10 ஆம் தேதி துவக்கப்பட்டு விட்டது. இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் – “India Rice and Agro Commodity” (இந்தியா அரிசி மற்றும் வேளாண் பொருட்கள்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

பிரம்மபுத்ரா ஆணை கட்ட சீனா அரசு பார்லிமென்டில் ஒப்புதல் வழங்கியுள்ளது!!

  • சீன அரசு இந்தியாவின் எதிர்பினையும் மீறி அருணாச்சல பிரதேச எல்லை அருகே பிரம்மபுத்ரா நதிக்கரையில் நீர்மின் நிலையத்தினை கட்ட பார்லிமென்டில் ஒப்புதல் வழங்கியுள்ளது. நேற்று சீனாவின் 14 வது ஐந்தாண்டு திட்டத்திற்காக பார்லிமென்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மொத்தமாக 60 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் அந்த நீர்மின் திட்டமும் ஒன்றாகும்.
  • லடாக் எல்லையில் ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது தணிந்து வரும் நிலையில் மீண்டும் இந்த திட்டத்தினை சீன அரசு கையில் எடுத்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் ஜப்பான் இடையே விண்வெளி ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

  • இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே விண்வெளி துறையில் ஒத்துழைப்பு வழங்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இஸ்ரோவிற்கும் ஜப்பான் நாட்டின் ஜாக்சா அமைப்புகளுக்கிடையே நடைபெற்றது. இதற்கான கூட்டம் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.
  • சந்திரனின் தென் துருவப் பகுதியில் ஒரு லேண்டர் மற்றும் ரோவரை அனுப்பும் திட்டங்களும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ரோவர் மொத்தமாக 350 கிலோ அளவிற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

மாநில நிகழ்வுகள்

டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் சாம்சங் நிறுவனம் கண்டுபிடிப்பு ஆய்வகத்தை நிறுவ ஒப்பந்தம் போட்டுள்ளது!!

  • டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், கண்டுபிடிப்புகளில் மேம்படையை ஏற்படுத்த கண்டுபிடிப்பு ஆய்வகத்தை நிறுவ ஒரு ஒப்பந்தத்தினை போட்டுள்ளது.
  • ஆய்வகத்தின் ஒரு பகுதியாக, சாம்சங் R&D இன்ஸ்டிடியூட், நொய்டா (எஸ்ஆர்ஐ-என்) இன் பொறியாளர்கள் டிடியு மாணவர்கள் ஆசிரியர்களுடன் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களில் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது சாம்சங் நிறுவனம் நாடு முழுவதும் எட்டு தொழில்நுட்ப ஆய்வகங்களைக் கொண்டுள்ளது.

APEDA பற்றி

நிறுவகிக்கப்பட்டது – 1989

தலைவர் – அங்கமுத்து

தலைமையகம் – புது டெல்லி

போபாலில் 27 வது “ஹுனார் ஹாத் கொண்டாடப்பட்டது!!

  • மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் வரவும் மார்ச் 21 ஆம் தேதி “உள்ளூர் குரல்” என்ற கருப்பொருளுடன் போபாலின் லால் பரேட் மைதானத்தில் 27 வது “ஹுனார் ஹாத்” என்ற விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. 600 க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள், கைவினைஞர்கள் பங்கேற்கின்றனர்.
  • இந்தியாவின் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் 75 வாரங்கள் நீடித்த “அம்ருத் மஹோத்ஸவ்” விழாவும் கொண்டாடப்பட உள்ளது.
  • அடுத்த “ஹுனார் ஹாத்” கோவாவில் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விழா மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.

முக்கிய நாட்கள்

இன்று “உலக கிட்னி தினம்” !!

  • மனிதர்களின் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு என்றால் அது, கிட்னி தான். இது ரத்தத்தினை சுத்திகரித்து உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தினை மக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 ஆம் தேதி “உலக கிட்னி தினம்” கொண்டாடப்படுகிறது.
  • சிறுநீரக பாதிப்பிற்கு என்ன காரணம், வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
  • ஆண்டுதோறும் கிட்னி பாதிப்பால் 10 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர்.

சர்வதேச கிலோகோமோ வாரம் அனுசரிப்பு!!

  • சர்வதேச கிலோகோமோ (கண் அழுத்த நோய்) வாரம் மார்ச் 7 ஆம் தேதி முதல் மார்ச் 13 ஆம் வரை கொண்டாடப்படுகின்றது.
  • இந்த கண் அழுத்த நோயானது பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய் ஆகும். இந்த ஙொய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் – The World is Bright, Save Your Sight (உலகம் பிரகாசமானது, உங்கள் பார்வையை காப்பாற்றுங்கள்) என்பதே ஆகும்.

Download TNPSC Notification 2021 

மரணங்கள்

பிரம்ம குமாரியின் தலைவர் தாதி ஹிருதே மோகினி காலமானார்!!

பிரம்ம குமாரியின் தலைமை நிர்வாகி தாதி ஹிருதே மோகினி மார்ச் 11 ஆம் தேதி தனது வயது மூப்பின் காரணமாக காலமாகியுள்ளார்.

மும்பை மாநகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் அதன் முன்னாள் தலைவர் தாடி ஜான்கி இறந்த பிறகு, அந்த அமைப்பின் தலைமை நிர்வாகியாக தாடி மோகினி நியமிக்கப்பட்டார்.

Download CA Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!