மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? வெளியான முக்கிய அப்டேட்!
இந்தியாவில் AICPI குறியீடு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அகவிலைப்படி 3% உயரும் என தகவல் வந்துள்ளது.
அகவிலைப்படி:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 – வது ஊதியக்குழு பரிந்துரையின் படி ஒரு ஆண்டிற்கு அகவிலைப்படி 2 முறை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான 2ம் கட்ட அகவிலைப்படி உயர்வு எப்போது அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் எத்தனை சதவீதம் உயரும் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.
இன்ஸ்டாக்ராமை தொடர்ந்து வாட்ஸ்அப்பிலும் புதிய பாதுகாப்பு அம்சம் – பயனர்கள் நிம்மதி!
இந்த அகவிலைப்படியானது நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது AICPI குறியீடு 136.4 புள்ளிகளாக உள்ளது. அதன்படி அகவிலைப்படியானது 3% உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்ந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 45%ஆக உயரும். மேலும் அகவிலைப்படி குறித்த அறிவிப்புகள் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.