அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 21% ஆக உயர்வு – ஜனவரி முதல் அமல்??

0
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 21% ஆக உயர்வு - ஜனவரி முதல் அமல்??
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 21% ஆக உயர்வு - ஜனவரி முதல் அமல்??
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 21% ஆக உயர்வு – ஜனவரி முதல் அமல்??

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் அரசு ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறும் வகையில் அகவிலைப்படி உயர்வினை 2021 ஜனவரி மாதம் முதலே அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு வரிவசூல் குறைந்து வருமான இழப்பு ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஜனவரி 2021 முதல் மீண்டும் அது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

2021 ஜனவரி-ஜூன் முதல் அகவிலைப்படி அறிவிப்பு மற்றும் ஜூலை முதல் டிசம்பர் 2020 வரை அறிவிக்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வு (21%) என இருஅறிவிப்புகள் 7வது ஊதியக்குழு சீரமைப்பில் இருக்கும் என்றும் இது 2021 ஜனவரியில் அமல்படுத்தப்படலாம் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் டி.ஏ. (அகவிலைப்படி) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டி.ஆர் 2021 ஜனவரி 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 2020-21 நிதியாண்டில் (2020 ஜனவரி முதல் 2021 பிப்ரவரி வரை 14 மாத காலத்திற்கு) சுமார் ரூ .12,510 கோடி (டிஏ) மற்றும் சுமார் 14,595 கோடி ரூபாய் (டிஆர்) செலவிடப்பட வேண்டி உள்ளதால் மத்திய அரசிற்கு நிதி பற்றாக்குறை ஏற்படும்.

முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

இதனால் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. நிவாரணம் வழங்கப்படுகிறது. இது ஒரு வருடத்தில் இரண்டு முறை மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது. முதல் அறிவிப்பு ஜனவரி முதல் ஜூன் வரையிலும், இரண்டாவது அறிவிப்பு ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் வெளியாகும். தற்போது இந்த வருடத்திற்கான டிஏ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

சமீபத்தில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ‘ஊனமுற்றோர் இழப்பீடு’ வழங்குவதாக அறிவித்துள்ளது. இது சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்ற மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎஃப்) பணியாளர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள், அவர்களின் பணியின் போது விபத்து நேர்ந்து ஊனமுற்ற போதிலும் பணியில் தக்கவைக்கப்பட்டால், அவர்களுக்கு ‘ஊனமுற்றோர் இழப்பீடு’ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!