மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் டமாக்கா..!! ” அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்”..!!
மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அகவிலைப்படியின் அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் பணி ஓய்வு தாரர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி விரிவாக கீழே காண்போம்.
நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்கும் பொருட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி உள்ளதாகவும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் 3% உயர்த்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, தொடக்க நிலையில் உள்ள ஊழியர்களின் மாத சம்பளம் ரூ, 18,000-எனில், இந்த 3% DA அடிப்படையில், அவர்களின் ஊதியத்தில் ரூ. 540 அதிகரித்து ரூ. 18,540 ஆக வழங்கப்படும். மேலும், இது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ரூ.9446 கோடி நிதி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


























