சிலிண்டர் விலை உயரும் அபாயம் – தட்டுப்பாட்டால் அச்சத்தில் மக்கள்!
நாடு முழுவதும் தற்போது சிலிண்டர் விலை உயர்வு குறித்து தான் மக்கள் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில், மேலும், விலை உயரும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விலை உயர்வு:
ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சிலிண்டர் விலை குறித்து அறிவிப்பு வெளியாவது போல் மே மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டது. வணிக சிலிண்டருக்கான விலை அதிக அளவில் உயர்ந்துள்ள நிலையில், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.
TNPSC Village Assistant 2023 – தேர்வர்கள் கவனத்திற்கு.. ஆன்லைனில் அசத்தல் சான்ஸ்!
இதனால் ஹோட்டல் போன்ற வணிக தளங்களில் கள்ள சந்தையின் மூலம் வீட்டு சிலிண்டர்களை பெற்று அதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும்,தற்போது வீட்டு சிலிண்டர் விலை, 1,118.50 ரூபாயாகவும்; வணிக சிலிண்டர் விலை 2,023 ரூபாயாகவும் உள்ளதால் இதன்மூலம் ரூ.1,000 க்கும் அதிகமாக லாபம் கிடைக்கிறது.
இது போன்ற செயல்களால் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். இதனைத்தொடர்ந்து வீட்டு சிலிண்டர்களின் விலையும் அதிகம் உயரும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.