நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 08, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 08, 2019

முக்கியமான நாட்கள்

மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினம்

  • சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8), உலகில் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுகிறது. பாலின சமத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு இந்த தினம் அழைப்பு விடுக்கின்றது.
  • தீம்‘Think Equal, Build Smart, Innovate for Change’.
  • பெண்களால் பெண்களுக்காக முயற்சியின் மூலம், பாலின சமத்துவத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்பதே இந்த தீம்-இன் நோக்கம் ஆகும்.

தேசிய செய்திகள்

மிசோரம்

மிசோரம் கவர்னர் கும்மணம் ராஜசேகரன் ராஜினாமா

  • மிசோரம் கவர்னர் கும்மணம் ராஜசேகரன் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மிசோரமின் ஆளுநராக அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜக்திஷ் முகீயை கூடுதல் பொறுப்பில் நியமித்தார். மிசோரமிற்கு ஆளுனர் நியமிக்கப்படும் வரை இவர் இந்த பதவியில் வகிப்பார்.

சர்வதேச செய்திகள்

36 நாடுகள் சவூதி அரேபியா மீது மனித உரிமை மீறலுக்கு கண்டனம்

  • சவூதி அரேபியா மீது மனித உரிமைகள் மீறல் பதிவை திறந்த கடிதத்தில் முப்பத்தி ஆறு நாடுகள் கையெழுத்திட்டு விமர்சித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கனடா, நோர்வே, நியூசிலாந்து, லிச்டென்ஸ்டீன், மொனாகோ மற்றும் மாண்டினெக்ரோ ஆகிய நாடுகள் கூட்டுக் கண்டனக் கடிதத்தில் கையெழுத்திட்டது.

அணுசக்தி ஏவுகணைகளை ஐரோப்பா பயன்படுத்துவதை நேட்டோ தலைவர் நிராகரித்தார்

  • நேட்டோவின் பொது செயலர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க், தரைவழி அடிப்படையிலான அணுசக்தி ஏவுகணைகளை ஐரோப்பா பயன்படுத்துவதை நிராகரித்தார். இந்த உடன்பாட்டின்படி அனைத்து தரை வழி ஏவுகணை, வழக்கமான அல்லது அணுசக்தி, 310 முதல் 3,400 மைல் வரையிலான எல்லைகளைக் கடந்து தாக்கக் கூடிய அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநாடுகள்

தேசிய பெண்கள் வாழ்வாதார கூட்டம் -2019

  • பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச மகளிர் தினத்தன்று, உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற தேசிய பெண்கள் வாழ்வாதார கூட்டம் 2019ல் கலந்து கொண்டார்.

பெண் கண்டுபிடிப்பாளர்கள்[Womennnovators]

  • புதுடில்லியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண் கண்டுபிடிப்பாளர்களை[Womennnovators] அறிமுகப்படுத்தி, எம்எஸ்எம்-க்கு கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு வழங்கும் தேசிய கருத்தரங்கில் உரையாற்றினார் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

நியமனங்கள்

  • ஆசாப் சயீத் – சவூதி அரேபியாவிற்கான இந்தியாவின் புதிய தூதர்
  • பத்மா லட்சுமி – ஐ நா வளர்ச்சி திட்டத்தின் நல்லெண்ண தூதர்

திட்டங்கள்

இந்தியா குளிர்ச்சி நடவடிக்கை திட்டம்

  • உலகில் முதல் நாடாக ஒரு விரிவான குளிர்ச்சி நடவடிக்கை திட்டத்தை வரையறுத்துள்ளது, இது ஒரு நீண்ட கால பார்வை கொண்டது, இது பல்வேறு துறைகளில் உள்ள குளிர்விக்கும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், குளிரூட்டும் கோரிக்கைகளை குறைக்க உதவும் செயல்களை பட்டியலிடும். சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் இந்தியா குளிர்ச்சி நடவடிக்கை திட்டத்தை (ஐ.சி.ஏ.பி) துவக்கி வைத்தார்.

ஸ்டார் மதிப்பீட்டு திட்டம்

  • மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் வாஷிங் மெஷின்களுக்கான ஸ்டார் மதிப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது; இதன் மூலம் 2030ம் ஆண்டளவில் 3.0 பில்லியன் யூனிட்களை சேமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேசிய எரிசக்தி திறன் மூலோபாயம் திட்டம் 2031 – UNNATEE (தேசிய எரிசக்தி ஆற்றல் திறன் நிகழும் தன்மை) தொடங்கப்பட்டது.

மாதவிடாய் சுகாதாரம் மேலாண்மை திட்டம்

  • இந்தியாவின் ஸ்டீல் ஆணையத்தின் கீழ், ஹரியானாவில் உள்ள நுஹ் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் “மாதவிடாய் சுகாதாரம் மேலாண்மை திட்டத்தை” ஆதரவு அளிக்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய NCLT பெஞ்சுகள்

  • ஆந்திராவின் அமராவதியிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோரிலும், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி.) இரண்டு புதிய பெஞ்ச் அமைக்க அரசு அங்கீகரித்துள்ளது.

WCD மற்றும் திறன் வளர்ச்சி அமைச்சகத்திற்கு இடையில் ஒப்பந்தம்

  • மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் திறன் வளர்ச்சி, தொழில்முயற்சிகள் அமைச்சகம் ஆகியவைக்கு இடையே பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கும் திறமை மேம்பாட்டிற்காக அவர்களை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

விருதுகள்

நாரி சக்தி விருதுகள்

  • புதுடில்லியில் 2018 ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார், இது இந்தியாவில் பெண்களுக்கு வழங்கும் மிக உயரிய கௌரவமாகும்.
  • இந்த விருதுக்கு 44 பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுள்ளனர்.
  • இந்த ஆண்டு, நாரி சக்தி விருதுகள் ஒரு புள்ளி மையம் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் பெண்களை கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதத்தை மேம்படுத்திய மாநிலத்திற்கும் வழங்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு போட்டி கட்டணத்தை நன்கொடையாக வழங்கினர்

  • புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பீ.எஃப் அதிகாரிகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராஞ்சியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பு இராணுவத் தொப்பி அணிந்து விளையாடினர், அவர்களது போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!