நடப்பு நிகழ்வுகள் – 05 மே 2023
நடப்பு நிகழ்வுகள் – 05 மே 2023
தேசிய செய்திகள்
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்திற்கு “ நவரத்னா ” அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது .
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்திற்கு “ நவரத்னா ” அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது . RVNL நிறுவனத்திற்கு செப்டம்பர் 2013 இல் “ மினி – ரத்னா ” அந்தஸ்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
RVNL க்கு “ நவரத்னா ” அந்தஸ்து வழங்குவதன் மூலம் அதிகாரங்களின் மேம்பட்ட பிரதிநிதித்துவம் மற்றும் அதிக செயல்பாட்டு சுதந்திரம் மற்றும் நிதி சுயாட்சிக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவிற்கு 161 வது இடம் .
2023 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 11 இடங்கள் சரிந்து , 180 நாடுகளில் 161 வது இடத்தைப் பிடித்துள்ளது .
RSF( Reporters Without Borders) அமைப்பானது உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை வெளியிட்டது மற்றும் இதில் 180 நாடுகளில் பத்திரிகையின் நிலையை மதிப்பிடுகிறது . மேலும் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக , நார்வே ஆனது இந்த குறியீட்டில் 1 வது இடத்தைப் வருகிறது என்பது இதில் குறிப்பிடத்தக்கது .
இந்தியா அடுத்த ஆண்டு முதல் தனது நாட்டின் சொந்த வெப்பக் குறியீட்டை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .
இந்தியா அதன் மக்கள்தொகை வெப்பத்தின் தாக்கத்தை அளவிடுவதற்கும் , குறிப்பிட்ட இடங்களுக்கு வெப்ப தாக்கம் சார்ந்த வெப்ப அலை எச்சரிக்கைகளை உருவாக்குவதற்கும் அடுத்த ஆண்டு முதல் இனி ஒவ்வோராண்டும் நாட்டின் சொந்த வெப்ப குறியீட்டை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .
இந்த குறியீட்டின் மூலம் ஒரு பகுதி உண்மையில் எவ்வளவு வெப்பமாக உணர்கிறது என கணக்கிட முடியும் மற்றும் காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த குறியீட்டை தீர்மானிக்கும் என கூறப்பட்டுள்ளது .
சர்வதேச செய்திகள்
2023 ம் ஆண்டிற்க்கான முதல் சூறாவளிக்கு “ மோச்சா புயல் ” என்று பெயர் வைக்கப்பட்டது .
மோச்சா புயலானது செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள யேமன் நாட்டின் துறைமுக நகரமான மோச்சாவிலிருந்து ( அல்லது மோக்கா ) உருவான காரணத்தால் “ மோச்சா புயல் ” என பெயர் வர காரணமாயிற்று .
மோச்சா நகரமானது காபி வர்த்தகத்திற்கும் , நீண்ட காலமாக புகழ்பெற்ற மோச்சா காபிக்கும் நன்கு அறியப்பட்ட நகரமாகும் . உலக வானிலை அமைப்பு (WMO) வழங்கிய ஆணையின்படி இந்த சூறாவளிக்கு மோச்சா புயல் என பெயர் பெயரிடப்பட்டது ,
மாலத்தீவு கடலோர காவல்படைக்கான இந்திய துறைமுகத்திற்கு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார் .
மாலத்தீவின் தலைநகர் மாலேயில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல்படை ‘ ஏகதா துறைமுகத்திற்கு ” இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அவருடன் மாலத்தீவு பிரதமர் மரியா தீதி ஆகியோர் அடிக்கல் நாட்டினார் .
கடந்த 11 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஒருவர் தீவு நாட்டிற்கு வருவது என்பது , இதுவே முதல் முறை என்பது இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .
UAE அரசாங்கமானது ‘ இயந்திரங்கள் 2023 ஐ பார்க்க முடியும் ’ தலைப்பில் தனது உச்சிமாநாட்டைத் தொடங்கியுள்ளது .
AI இன் எதிர்காலம் குறித்த கேள்விகள் மற்றும் பதில்கள் , அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்கை உருவாக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பார்வைக்கு பங்களிக்கும் திறனைப் பற்றி விவாதிப்பதையும் உலகம் முழுவதும் உள்ள நிபுணர்களை ஒன்றிணைப்பதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது .
துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை மற்றும் துபாய் ஃபியூச்சர் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது இதில் குற்பியிடத்தக்கது .
மூன்று ஈரானிய பெண் ஊடகவியலாளர்களுக்கு பத்திரிகை சுதந்திரத்துக்கான ஐ . நா . வின் உயரிய விருது வழங்கப்பட்டது .
ஈரானில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பெண் ஊடகவியலாளர்களுக்கு , உண்மை மற்றும் பொறுப்பு அர்ப்பணிப்புக்காக இந்த ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திரத்திற்கான ஐ . நா . வின் உயரிய விருது வழங்கப்பட்டது .
யுனெஸ்கோவின் உலகப் பத்திரிகை சுதந்திரப் பரிசானது 1986 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட கொலம்பிய பத்திரிகையாளரான கில்லர்மோ கானோ அவர்களின் பெயரால் வழங்கப்படுகிறது . 1997 ஆம் ஆண்டு முதல் , உலக பத்திரிகை சுதந்திர தினத்துடன் இணைந்து ஆண்டுதோறும் மே 3 அன்று வழங்கப்படுகிறது .
NTPC வங்காளதேசத்தில் அனல் மின் நிலையத்தை தொடங்கி , அதன் முதல் வெளிநாட்டு திறன் மையத்தை திறந்துள்ளது .
NTPC குழுவானது சமீபத்தில் வங்காளதேசத்தின் பாகர்ஹாட் , மோங்லா , ராம்பால் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 1320 மெகாவாட் (2×660) மைத்ரீ சூப்பர் அனல் மின்நிலையத்தில் (MSTPP) 660 மெகாவாட் திறன் கொண்ட யூனிட் -1 ஐ தனது குழுவில் சேர்த்துள்ளது .
இந்த புதிய சேர்த்தலின் மூலம் NTPC- யின் நிறுவப்பட்ட திறனானது 72304 மெகாவாட்டாக உயர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது .
மாநில செய்திகள்
உணவு பொருள்கள் கடத்தலை தடுக்கவும் , தரமான உணவு பொருள்களை வழங்கவும் தமிழகத்தில் முதல் முறையாக க்யூ ஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் உணவு பொருள்கள் கடத்தலை தடுக்கவும் , தரமான உணவு பொருள்களை வழங்கவும் முதல் முறையாக க்யூ ஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
மேலும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பால்கொலா நியாய விலை கடையில் இலவசமாக சிறுதானியங்களை வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது .
நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் குறு , சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள குறு , சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதையும் , SRI நிதியின் கீழ் உள்ள பலன்களைப் பயன்படுத்தி அவர்களின் வணிகங்களைப் பெருக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது .
இந்திய அரசு , ரூ .10,006 கோடியை SRI நிதிக்காக அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இந்த நிதிகள் மூலம் குறு , சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு மூலதனத்தை வழங்குவதில் இந்த திட்டமானது கவனம் செலுத்துகிறது .
நியமனங்கள்
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த “ அஜய் பங்கா ” நியமிக்கப்பட்டுள்ளார் .
உலக வங்கியின் 25 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவானது மே 03 அன்று , முன்னாள் மாஸ்டர்கார்டு ( மாஸ்டர்கார்டு என்பது உலகளவில் இரண்டாவது பெரிய கட்டணச் செயலாக்க நிறுவனமாகும் ) தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்காயை ஐந்தாண்டு காலத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அறிவிப்பை வெளியிட்டது .
63 வயதான பங்கா , பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனால் இந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது இதில் குறிப்பிடத்தக்கது .
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
அமெரிக்காவானது முதல் RSV தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது .
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமானது (FDA), GSK இன் சுவாச ஒத்திசைவு வைரசுக்கான RSV முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது .
இது குறிப்பாக வயதானவர்களுக்கு ஆபத்தான ஒரு பொதுவான சுவாச பாதிப்பாக விளங்கும் வைரசுக்கு எதிராக முதல் தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கதாகும் . இந்த தடுப்பூசி மூலம் வயதானவர்கள் எளிதல் பாதிக்கப்படும் சுவாச நோயிலிருந்து சுலபமாக மீள முடியும் என GSK நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது .
கரடி ரோமத்திலிருந்து வீரியம் மிக்க மருந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் சிலாத் எனப்படும் கரடிகளின் ரோமத்தில் “ ஆன்டிபையாட்டிக் பாக்டீரியாக்கள் ” இருப்பதை கண்டறிந்துள்ளனர் .
இந்த வகை கரடிகள் பெரும்பாலும் மத்திய அமெரிக்காவிலுள்ள கோஸ்டா ரிக்கோ கடற்கரைகளில் அதிகமாக வாழும் என அறிவிக்கப்படுகிறது .
முக்கிய தினம்
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 4 அன்று தீயணைப்பு வீரர்கள் ஆற்றிய மகத்தான பணியை கௌரவிப்பதற்கும் , அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் (IFFD) அனுசரிக்கப்படுகிறது .