ஏப் .18ம் தேதி வரை ஊரடங்கு அமல் – மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு.. பள்ளிகள் இயங்காது!
உத்தரகாண்ட் மாநிலத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் புலிகளை பிடிக்கும் நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு:
உத்தரகாண்ட் மாநிலம் பௌரி கர்வால் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் புலிகள் நடமாட்டம் அதித்துள்ளது. வனப்பகுதியில் இருந்து தப்பி புலிகள் வசிப்பிடத்திற்கு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 24 மணி நேரமும் புலிகள் தெருக்களில் நடமாடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஆளாகியுள்ளனர்.
Post Office: மூத்த குடிமக்களுக்கான அருமையான சேமிப்பு திட்டம் – முழு விவரம் உள்ளே!
அண்மையில் புலி தாக்கப்பட்டு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக உத்தரகாண்ட்டின் கௌரி கர்வால் மாவட்டத்தில் ரிகானிகல் மற்றும் துமகோட் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 7 மணி முதல் நாளை (ஏப்.18) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து அப்பகுதிகளில் இயங்கும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் நாளை வரை மூடப்படும் என்றும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.