கடலூர் சிதம்பரம் கோயிலில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை – வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி செல்ல பல்வேறு காரணத்திற்காக சிதம்பரம் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதையடுத்து கோவிலின் கனகசபை மேல் ஏறி செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது. இப்போது இது தொடர்பான தீவிர ஆலோசனையில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஆலோசனை முடியும் வரை கோவிலுக்கு செல்ல தடை என்று வருவாய் கோட்டாட்சியர் ரவி ஆணை பிறப்பித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த 2020 ஆண்டு அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க தடை விதிக்கப்பட்டது. அத்துடன் கோவில் திருவிழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு கோவில் திருவிழாக்கள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய கொரோனா கால கட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை கோவில் நிர்வாகம் அளித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் 31க்கு பிந்தைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அதன்படி நடராஜர் கோயிலில் கனகசபை மேல் செல்ல விஐபி பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனைவருக்கும் தடை விதித்தனர். ஆனால் பொதுமக்கள் அனைவரும் கனகசபை மேல் ஏறி சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
மிதி வண்டி ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.50,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை !
அத்துடன் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடத்தி வந்தனர். இதனால் கோவிலில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் நிலைமையை சரி செய்ய அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள், இதர போராட்டக் குழுவினர் உள்ளிட்டவை சிதம்பரத்தில் போராட்டம் நடத்த கூடாது என்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக அரசு சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதனால் இந்த ஆலோசனை முடியும் வரை கோவிலுக்குள் இன்று முதல் 1 மாத காலத்திற்கு 144 தடை விதிக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் ரவி ஆணை பிறப்பித்துள்ளார்.