மிதி வண்டி ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.50,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை !
கடலூர் மாவட்டம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள Driver, Night Watchman பணிக்கு என்று ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிக்கு 22.04.2022 அன்றைய நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TNHRCE Cuddalore |
பணியின் பெயர் | Driver, Night Watchman |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Driver, Night Watchman பனிக்களுக்குஎன்று தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தம் இரண்டு பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
TNHRCE தகுதிகள்:
- Driver, Night Watchman பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8வது முடித்திருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் நல்ல உடல் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும்.
- Driver பணிக்கு விண்ணப்பதாரர்கள் LMV மற்றும் Badge லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
- Night Watchman பணிக்கு விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி நன்கு ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
TNHRCE வயது வரம்பு:
இப்பணிக்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயதானது, பொது பிரிவினருக்கு 32 வயது என்றும், BC, MBC, DNC விண்ணப்பதாரர்களுக்கு 34 வயது என்றும், SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது என்றும், வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
TNHRCE ஊதியம்:
ஓட்டுநர் (Driver) பணிக்கு ரூ.19,500/- முதல் ரூ.52,000/- என்றும், இரவு காவலர் (Night Watchman) பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- என்றும் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும்.
TNHRCE தேர்வு முறை:
மேற்கண்ட பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரருக்கு மட்டும் நேரடியாக நேர்காணல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களை இணைத்து இறுதி நாளான 22.04.2022 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும் படி தபால் அனுப்ப கேட்டுக் கொள்கிறோம்.