ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – மொபைல் எண் அப்டேட்! IPPB முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் தங்களின் மொபைல் எண்ணை இணைத்திருப்பது அவசியமாகும். தற்போது வீட்டிலிருந்தபடியே இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் எளிதாக ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்கலாம்.
ஆதார் எண்:
இந்தியாவில் ஆதார் கார்டு ஒவ்வொரு குடிமக்களுக்கும் முக்கிய ஆவணமாக உள்ளது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிநபரின் வேலைகளுக்கும் அரசு வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை வந்து விட்டது. இந்த நிலையில் ஆதாரில் உள்ள விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியமாகும். UIDAI அமைப்பு ஆதாரில் தேவையான விவரங்களை மாற்றும் வசதியை வழங்குகிறது. அதன் படி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அஞ்சலகம் மற்றும் ஆதார் மையத்தில் விவரங்களை மாற்றலாம்.
தமிழகத்தில் மார்ச் 31க்கு பிந்தைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தற்போது ஆதார் எண் அவசிய ஒன்றாக உள்ளதால் அதை எப்போது அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். அதாவது முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவற்றை அப்டேட் செய்ய வேண்டும். மேலும் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைந்திருப்பது கட்டாயமாகும். இப்பொழுது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க அஞ்சல்துறை புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி தபால்காரர் வீடு தேடி வந்து இந்த சேவையை உங்களுக்கு வழங்குவர்.
இதற்கு சம்பந்தப்பட்ட பகுதி தபால்காரர்களுக்கு இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். ஆதார் எண் மற்றும் மொபைல் போனுடன் அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது தபால்காரரைத் தொடர்பு கொண்டு இந்தத் திட்டம் மற்றும் வசதியைப் பெறலாம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புதிய ஆதார் கார்டையும் வீட்டிலிருந்தபடியே பெறலாம். தற்போதைக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.