18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – அரசு அறிவிப்பு!!
மத்திய அரசு அறிவித்துள்ள படி மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலவச தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா அவசர கால பயன்பாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் இருந்து வருகின்றன. இந்த கொரோனா தடுப்பூசிகள் முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் போடப்பட்டது. மீண்டுமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தடுப்பூசி 60 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கடந்த வாரம் அறிவித்திருந்தது.
TN Job “FB Group” Join Now
அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தற்போது தீவிரமடைந்து வருகின்றன. மத்திய அரசு அறிவித்தபடி மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தடுப்பூசி போடும் செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவிற்குள் நுழைய இந்திய பயணிகளுக்கு தடை – ஏப்ரல் 27 முதல் அமல்!!
இது குறித்து அவர் கூறுகையில் ‘தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் செலவில் 1.34 கோடி கொரோனா தடுப்பூசிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி விலையை குறைக்கும்படி உற்பத்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர். இந்த தடுப்பூசி போடும் செலவை டெல்லி அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.