இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும் – மருத்துவர் கணிப்பு!!
இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை உச்சத்தில் இருந்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் மே மாத இறுதியில் குறையும் என வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கம்
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொடிய வைரஸான கொரோனா இந்தியாவில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது. தவிர தினமும் 4 ஆயிரம் வரை பலி எண்ணிக்கை ஏற்படுகிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகளும், மத்திய அரசும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மே மாத இறுதியில் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் குறைய வாய்ப்புள்ளதாக வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் கணித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் பேராசிரியரும், பஞ்சாப் மற்றும் ஆந்திர பிரதேச மாநில கொரோனா தொற்று தடுப்புக்குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றி வரும் வைராலஜிஸ்ட் ககன்தீப் காங் தெரிவிக்கையில், இந்தியாவில் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மே மாத இடையில் அல்லது இறுதியில் படிப்படியாக குறைய துவங்கும் என கணித்துள்ளோம்.
தமிழகத்திற்கு கூடுதல் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் – இன்று வருகை!!
மேலும் கொரோனா வைரஸின் சில வகைகளை பொறுத்தளவு, ஜூன் மாதம் முதல் வாரத்தில் தான் குறைய துவங்கும். இருந்தாலும் குறிப்பிட்ட அளவு நோய் தாக்கம் மே மாத இடையில் குறைய துவங்கும். தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிரான நல்ல பலனை தருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். தவிர கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் முழு ஊரடங்கு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.