தமிழகத்திற்கு கூடுதல் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் – இன்று வருகை!!
நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று (மே 6) தமிழகம் வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகள்
இந்தியாவில் மத்திய அரசின் ஒப்புதலின் படி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல், முதல் கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவருக்கும் செலுத்தப்பட்டது. தவிர 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்குட்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இரண்டாம் கட்டமாக செலுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மீண்டுமாக மே மாதம் 1 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. தவிர மத்திய அரசு அறிவித்த படி, பல மாநிலங்களில் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக மே 1 ஆம் தேதி தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை.
இந்தியாவில் ஒரே நாளில் 4,12,262 பேருக்கு கொரோனா – 3,980 பேர் உயிரிழப்பு!!
அதே போல தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் மக்களுக்கு செலுத்துவதற்காக கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று (மே 6) தமிழகம் வந்தடைந்துள்ளது. முன்னதாக 60,03,590 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும், மேலும் 10,82,130 கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களும் தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.