சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் – 2,000 பேருக்கு வழங்க ஏற்பாடுகள்!!!
கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் சென்னையில் இன்று முகாம் மூலம் 2,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனாத்தொற்று 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவி விட்டது. மிகவும் வேகமாக பரவும் தொற்று வகையை சேர்ந்ததால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அனைத்தும் ஊரடங்கு முறையை பின்பற்றியது. மேலும், இதற்கான தடுப்பூசியை கண்டறியும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட தொடங்கியது.
பி.எட் படித்த முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் – விண்ணப்பபதிவு காலதாமதம்!!!
தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்டது. முதலில் முன்னுரிமை அடிப்படையில் முன்களப்பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. பின்னர் வயதானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது.
முகாம்:
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் பறவை வரும் காரணத்தால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 4 லட்சம் மக்களுக்கு சென்னையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் 20முறுத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு 2,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம் இன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகாமுக்கு வரும் போது ஏதேனும் அடையாள அட்டை ஒன்றை கொண்டு வர வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்