பி.எட் படித்த முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் – விண்ணப்பபதிவு காலதாமதம் !
பி.எட் படித்துள்ள முதுகலை பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க இயலாத காரணத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தமிழக ஆசிரியர்கள் தேர்வு வாரியம் தேர்வின் மூலம் தேர்வு செய்கிறது. ஆசிரியர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப தகுதி தேர்வுகளை தனித்தனியாக நடத்துவதன் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். நடப்பு ஆண்டில் கொரோனா தொற்றின் அச்சத்தின் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடக்க உள்ளது.
நடப்பு ஆண்டு தேர்வுகள்:
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2,098 காலிப்பணி இடங்களுக்கான நடப்பு ஆண்டு தேர்வுகள் ஜூன் 26 மற்றும் 27ம் தேதி ஆன்லைன் முறையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் மார்ச் 1ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
ஜூன் மாத தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை பயன்படுத்த முயன்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பதிவு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் விண்ணப்பதிவு தொடங்கும் நாட்கள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புகார்கள்:
இதனால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறும் போது, “தொழில்நுடப் கோளாறு காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த ஆன்லைன் விண்ணப்பதிவு இன்னும் சரி செய்யப்படவில்லை. இதனால் தேர்வை தள்ளிவைக்க முயற்சிகள் நடக்கலாம். இனியும் தாமதிக்காமல் உடனடியாக ஆன்லைன் விண்ணப்பபதிவை தொடங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்