கொரோனா பணியாளர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை – மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வருங்காலங்களில் அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசு வேலையில் முன்னுரிமை
நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்களை காக்கும் சிறப்பான பணியில் ஈடுபட்டு வருபவர்கள் சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்கள். இவர்கள் தான் கொரோனா உயிர்கொல்லி நோயில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களை காப்பாற்றும் உன்னதமான சேவையை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் பல மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது.
இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 3.57 லட்சம் பேருக்கு தொற்று!!
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வருங்காலங்களில் அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக ஏராளமான மருத்துவ பணியாளர்கள் போராடி வருகின்றனர். தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான மருத்துவ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்காலத்தில் அரசு பணி வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
மேலும் மருத்துவ மாணவர்களுக்கான PG நீட் தேர்வுகள் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மருத்துவ படிப்புகளில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை மருத்துவ பணிகளில் ஈடுபடுத்தலாம். தவிர பி.எஸ்.சி நர்சிங் படித்துள்ள தகுதியுள்ள மாணவர்களை மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி பணியில் ஈடுபடுத்தலாம். மேலும் 100 நாட்களுக்கு மேல் மருத்துவ பணியில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமையும், தேசிய விருதுகளும் வழங்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்