இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 3.57 லட்சம் பேருக்கு தொற்று!!
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
கடந்த ஆண்டில் இருந்து கொரோனா நோய் பரவல் தொடர்ந்து மக்களை துன்புறுத்தி வருகின்றது. இந்த நோய் தாக்கத்தின் காரணமாக தற்போது வரை இந்தியாவில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்து உள்ளனர். பாதிப்பு விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே இருந்தது. இதனால் அரசு தரப்பில் இருந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
தற்போது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக கொரோனா பரவல் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக குறைந்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 2 ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 3.68 லட்சமாக இருந்தது. ஆனால், மே 3 ஆம் தேதி பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 3.57 லட்சமாக இருந்தது. அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் 3.20 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
நாடு தழுவிய முழு ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வு – ராகுல் காந்தி பேச்சு!!
இந்தியாவில் நலமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 81.91 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.09 என்று இருக்கின்றது. தற்போது இந்த நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு 16.99 சதவீத மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்