ஜப்பானில் அவசர நிலை செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பு!
ஜப்பானில் நடைமுறையில் அவசர நிலை செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
அவசர நிலை :
உலகம் முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சீனா போன்ற நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. உலக சுகாதாரத்துறை அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்து கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்க்கு வந்தது. அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு – மாலை விற்பனை!
வைரஸ் தொற்றிலிருந்து நம்மை காக்கும் தடுப்பூசிகளை மக்கள் காட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசிகளை மக்கள் ஆர்வத்துடன் செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நூதன முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொற்றும் ஓரளவு குறைந்து வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து ஜப்பானில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வந்தாலும் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
தமிழக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை என்று ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார் இதன் காரணமாக ஜப்பானில் நோய் தடுப்பு பணியாக தலைநகர் டோக்கியோ மற்றும் 18 இதர பகுதிகளில் அவசர நிலை அமலில் உள்ளது. இந்த அவசர நிலையானது வரும் 12ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.