நவ.22 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – கொரோனா பரவல் தீவிரம் எதிரொலி!

0
நவ.22 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் - கொரோனா பரவல் தீவிரம் எதிரொலி!
நவ.22 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் - கொரோனா பரவல் தீவிரம் எதிரொலி!
நவ.22 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – கொரோனா பரவல் தீவிரம் எதிரொலி!

உலகின் பல்வேறு நாடுகளை கதிகலங்க செய்த கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவி உச்சத்தை தொட்டு வருகிறது. அதனால் சில நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பரவும் கொரோனா:

உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பில் சிக்கிக்கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த கொரோனா பெருந்தொற்று முதலில் சீனாவில் உள்ள வுஹான் நகரில் தான் பரவியது. அங்கும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் சீனாவை தொடர்ந்து ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, இத்தாலி என பல்வேறு நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த கொடிய கோவிட்-19 வைரஸால் ஈடுகட்ட முடியாத அளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அதனால் அனைத்து நாடுகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா முதல் காலையிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.

BSNL நிறுவனத்தின் Disney+ Hotstar உடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

கொரோனா முதல் அலையை தொடர்ந்து 2வது அலையில் கோடிக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனை சரி செய்யும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு தொற்று பரவல் குறைந்து வருகிறது. தற்போது உலக நாடுகள் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரியா நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளதால் அந்நாட்டில் திங்கள் கிழமை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் காட்டிய அலட்சியமே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 15 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் வரும் பிப்ரவரி 1 ம் தேதிக்குள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்று அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TCS நிறுவனத்தின் கல்லூரி மாணவர்களுக்கான திட்டம் – மிஸ் பண்ணாம படிங்க!

நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகள் கட்டுப்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹங்கேரி நாட்டில் மக்கள் வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணியுமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!