அக்.15 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ரா நகரில் புதிதாக 22 கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு வகை வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த டெல்டா மாறுபாடு வைரஸ் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டிலும் இவ்வகை பாதிப்புகள் மெல்ல அதிகரித்து வருகிறது. அதனால் நோய் கண்டறியப்பட்ட பகுதிகளில் மட்டும் அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.
செப்.21 வரை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!
முன்னதாக ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிட்னியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதியான கான்பெராவில் ஆகஸ்ட் 12 முதல் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் புதிய டெல்டா வகை வைரஸ், கடந்த ஜூன் 16 அன்று பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜூன் 26 முதலே சிட்னியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
B.Arch படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம் – செப்.19ம் தேதி கடைசி நாள்!
அந்த வகையில் இப்போது கான்பெர்ரா நகரில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று பிராந்திய முதல்வர் ஆண்ட்ரூ பார் தெரிவித்துள்ளார். சுமார் 4,30,000 மக்கள் வசிக்கும் நகரமான கான்பெர்ராவில் கடந்த மாதத்தில் டெல்டா வகை வைரஸ் தொற்று உருவாவதற்கு முன், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி முதல் ஒரு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கூட பதிவு செய்யப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.