செப்.21 வரை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!
கொரோனா 2 ஆம் அலை தொற்றுக்கு மத்தியில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மீண்டுமாக திறக்கப்பட்ட பள்ளிகள் பின்னர் ஒரு வாரம் கழித்து மூடப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்துள்ளதையடுத்து கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அதே போல கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் அம்மாநிலத்தில் எதிர்பாராதவிதமாக மீண்டும் உருவெடுத்த கொரோனா வைரஸ் தொற்று நோயால் 4 மாதங்களுக்கு பின்னதாக திறக்கப்பட பள்ளிகள் அனைத்தும் ஒரு வாரம் கழித்து மூடப்பட்டன.
B.Arch படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம் – செப்.19ம் தேதி கடைசி நாள்!
இந்த உத்தரவானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் உத்தரவு வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஹிமாச்சல் பிரதேசத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பருவத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Apple iPhone 13 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்? தேதி, விலை உள்ளிட்ட விபரங்கள்!
இது தொடர்புடைய உத்தரவை பிறப்பித்த ஹிமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (SDMA), அம்மாநிலத்தில் கொரோனா நேர்மறை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகள் இன்னும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஹிமாச்சல பிரதேசத்தில் தினமும் சராசரியாக 200 கொரோனா வழக்குகள் பதிவாகி வருகின்றது. மேலும் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளின் நேர்மறை விகிதம் ஜூலை மாதத்தில் 0.9% இலிருந்து 2% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.