இந்தியாவில் ஒரே நாளில் 3.66 லட்சம் பேருக்கு கொரோனா – 3,754 பேர் பலி!!
கொரோனா பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3.66 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலங்கள் தோறும் பல தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், கொரோனா புதிய பாதிப்பு தினமும் லட்சங்களை தாண்டி பதிவு செய்யப்படுகிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 26 மாநிலங்களில் ஊரடங்கு அமல் – GSI மதிப்பெண் உயர்வு!!
இந்நிலையில் ஒரே நாளில் நாடு முழுவதும் 3.66 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு நேற்று முன் தினத்தை விட சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தோர், பலியானவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், இறப்பு விகிதம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி,
- கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,26,62,575 ஆக உயர்ந்துள்ளது.
- நேற்று ஒரே நாளில் 3,754 பேர் உயிரிழந்துள்ளனர்.
- அதன் படி மொத்த பலி எண்ணிக்கை 2,46,116 ஆக உயர்ந்துள்ளது.
- இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,86,71,222 ஆக உயர்ந்துள்ளது.
- தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 37,45,237 பேர் சிகிச்சையில் உள்ளனர்.