இந்தியாவின் 26 மாநிலங்களில் ஊரடங்கு அமல் – GSI மதிப்பெண் உயர்வு!!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு முடக்கம் காரணமாக, குளோபல் ஸ்ட்ரின்ஜென்சி இன்டெக்ஸில் எனப்படும் உலகளாவிய அட்டவணையில் இந்தியாவின் மதிப்பெண் 74 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு எதிரொலி:
ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் கவர்ன்மென்ட் ரெஸ்பான்ஸ் ட்ரேக்கர் ஒரு கலப்பு குறியீட்டைத் தயாரித்துள்ளது. அந்த குறியீடுகள் பள்ளி மற்றும் பணியிடங்கள் மூடல், பொது நிகழ்வுகளை ரத்து செய்தல், பொதுக் கூட்டங்கள், பொது போக்குவரத்து நிறுத்துவது குறித்த அளவீடுகள் செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அளவீடுகளில் மொத்த மதிப்பெண் 100 என் இருக்கையில், நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்துவதால், இந்த அளவீடுகளில் மதிப்பெண்கள் 100 வரை காணப்படும். இந்தியாவை பொருத்தளவு 26 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் பொதுமுடக்கமும், அதற்கு ஏற்றவகையில் சில கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்கிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் பேருந்துகள் இயக்கம் – அரசு அறிவிப்பு!!
இதன் காரணமாக குளோபல் ஸ்ட்ரின்ஜென்சி இன்டெக்ஸில் அளவீடுகளில் இந்தியாவின் மதிப்பெண் 74 ஆக உள்ளது. இருந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 98 சதவீதம் பேர் ஏதேனும் ஒரு வகையான பொது முடக்கத்தின் கீழ் உள்ளனர். அதாவது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர குஜராத், தெலுங்கானா, அசாம், ஹிமாச்சல் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
முன்னதாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, குளோபல் ஸ்ட்ரின்ஜென்சி இன்டெக்ஸில் அளவீட்டில் இந்திய மதிப்பெண் 100 ஆக இருந்தது. தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி இந்த மதிப்பெண் 74 ஐ எட்டியது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த மதிப்பெண் இந்த மே மாதத்திற்கு புதுப்பிக்கப்படவில்லை. இருந்தாலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் குளோபல் ஸ்ட்ரின்ஜென்சி இன்டெக்ஸில் மதிப்பெண் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.