தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் பேருந்துகள் இயக்கம் – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த வண்ணமாகவே இருந்து வருகின்றது. இதனால் பகுதி நேர மற்றும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருந்தது. ஒரு நாளைக்கு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
TN Job “FB Group” Join Now
அதே போல் 100க்கும் மேற்பட்டவர்கள் நாள் ஒன்றிற்கு மரணம் அடைந்தனர். இந்த அசாதாரணமான சூழலை கருத்தில் கொண்டு தமிழக அரசு 14 நாட்கள் முழு ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது. இன்று முதல் இந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 17 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
அதே போல் சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், முக்கிய வழித்தடங்களில் 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பேருந்துகளில் செல்ல இருக்கும் மக்கள் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து தான் பேருந்துகளில் பயணிக்க வேண்டும்.