மே 17 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மே 17 ஆம் தேதி வரை தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.5 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் 3700 க்கு மேல் பதிவாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் டெல்லியில் முழு ஊரடங்கை அறிவித்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது முழு ஊரடங்கு அறிவிப்பு மேலும் சில நாட்கள் நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 17 ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – இன்று முக்கிய ஆலோசனை!!
டெல்லியில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு நேரத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கும் எனினும் நேரக்கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.